எப்பொழுது மழை பெய்தாலும் சில
நினைவுகளும் கூடவே நனைய
வந்துவிடுகின்றன......
குடையிருந்தும் நனைந்த
பல நாட்கள்!
குடையின்றி நனைந்த
சில நாட்கள்!
"கவிதை" கிறுக்கிய
சில இரவுகள்
கவிழ்ந்து படுத்த
பல இரவுகள்
கண்ணீர் கரித்த
சில தருணங்கள்
கனவுக்குள் மிதந்த
பல தருணங்கள்
இப்படியிப்படி எத்தனையோ
நினைவுகள்............
இன்றும் மழை தான்
ஆனால் நினைவுகளில்
நீ மட்டும்..................
பி . கு
ஏதோ எனக்கு தோணினதை எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதியிருக்கிறேன்.......
நல்ல இருந்தா சொல்லுங்க சந்தோஷப்பட்டுகிறேன், இல்லன்ன திருத்தங்கள் இருந்தாலும் சொல்லுங்க திருத்திக்கிறேன்..........
மற்றைய நாட் குறிப்பு கவிதைகளைக்கூட வலையெற்றலாமே...
பதிலளிநீக்குமற்றொரு மழை!
பதிலளிநீக்கு