திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பெயரிடவில்லை.....

எழுதனும் எழுதனும் என்று நினைச்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து முடியாமையே இருந்தது ..... கடைசியில இன்னைக்கு ஒருவழியா வாய்ச்சிருக்கு....

இந் இடுகைக்கு பெயரிடவில்லை
(
ஏன்னா என்ன பெயர் வைக்கன்னு தெரியல்ல )
சில சின்ன சின்ன விஷயங்கள பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்....

*போன மாசம் நம்ம ரங்கஸ் ஆபீஸ்ல அன்னுவல் டூர் போய் இருந்தோம்(பொலன்னறுவ ) ஹோட்டல் ரிசெப்ஷன் எல்லாம் நல்லா தான் இருந்துது ஆனா ரூம் ஒண்ணுமே உருப்படி இல்ல, ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிளீன் பண்ணி பூட்டி வச்ச ரூம அப்பிடியே திறந்து தந்தாங்க, சண்டை போட்டு வேற ரூம் வாங்கிக்க வேண்டியதாப்போச்சு...

*சாப்பாடு வாய்ல வைக்க முடியல்ல. டைனிங் எ ஹால் போனதுல இருந்து வரும் வரைக்கும் திட்டிகிட்டே இருந்தோம் .....

*வேற வேற பேருல ஒரே ஐட்டத்த மாத்தி மாத்தி வச்சு கொலை பண்ணிட்டாங்க....

*இந்த ஹோட்டலுக்கு யாருங்க ஸ்டார் அதுவும் பைவ் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது???????????

*மத்தபடி சுற்றுபுறம் ரொம்ப நல்லாவே இருந்துது அதுவும் ஹோட்டலுக்கு எதிர்ல இருந்த லேக் ரொம்ப , இருந்தது.... அது தான் இங்க இருந்த ஒரே ஆறுதல்.
---------------------------------------------------------------------------------------------------

அமிர்தன் இப்ப ரொம்ப பெரிய ஆளா ஆகிட்டாரு... தானா அப்பாவோட கம்ப்யூட்டர் சேர் மேல ஏறி மவுஸ் தட்டுராறு.....
அவர சமாளிக்கிரதுக்குள்ள எனக்கு முழி பிதுங்குது (ஆனாலும் ரசிக்கத்தான் தோணுது )
-----------------------------------------------------------------------------------------------------
இராவணன் படம் பார்த்தோம்......( "என்னது காந்தி செத்துட்டாரா " அப்பிடின்னெல்லாம் கிண்டல் பண்ணப்படாது நானே 3 மாசம் கழிச்சு பதிவு போடுறேன் ஆமா சொல்லிபுட்டேன் ) எனக்கு பிடித்தது, அமிர்தன் ரொம்ப ரசிச்சு கைதட்டி பார்த்தான் :) (அவன் தியேட்டரில் பார்க்கும் இரண்டாவது படம் இது ...... )


இன்னும் நிறைய கதை இருக்கு ..... அதை எல்லாம் அடுத்த பதிவுல சொல்லுறேன் இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன் (அப்பாடா ஒரு தொடரும் போட்டாச்சி :) )