புதன், 20 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல் # 2


M.S அம்மாவின் குரல் போலவே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலிலும் எனக்கு பெரிய பிடிப்பு உண்டு... அவரது இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது...

லோகமாதாவான துர்கையை சின்னஞ்சிறு  பெண்ணாக எண்ணி கொஞ்சி, வர்ணித்துப் பாடும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த வரிகாளால் பாடி கொஞ்ச ஒரு பெண் குழந்தை வேண்டுமே என்று ஏங்க வைக்கும் இந்த பாடல்.

பாரதி தன் மானசீக காதலியான கண்ணம்மாவை குழந்தையாய் வரித்து பாடிய இந்த பாடல் வரிகள் நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் குழைந்து விழும் போது....உள்ளம் கொள்ளை போகவிட்டால் தான் ஆச்சரியம்.....


 இந்த பாடல்கள் தரும் சுகத்தை திரை இசையில் வந்த இந்த பாடல் தரும் ... கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் எனக்கு இந்த பாடல் பிடித்தமானது.
இதை போலவே நிலவே மலரே படத்தில் வரும் நிலவே மலரே பாடலும் ஒரு சுக ராகமே...

புன்னையிலை போலுன் சின்ன மணிப்பதம் மண்ணில் படக் கூடாது 
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக்கூடாது.
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ..
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ .. 


இன்னும் மீட்டுவேன்.....  

வெள்ளி, 15 ஜூலை, 2011

இந்த பயணத்தின் வயது நான்கு.....


இந்த பயணம் ஆரம்பித்தது சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் ... (15.07.2007)
திருமண எண்ணமே இல்லாதிருந்த இருவர் பார்த்த முதல் நாளில் தடம் மாறி பந்தத்தில் இணைந்த நாள் இது....


இந்த அன்புக்கு இரண்டு சாட்சிகளோடு இன்று போல் எங்கள் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்....


இந்த பாடல் எனக்கே எனக்கான என்னவருக்காக... 


என்றும் எங்கள் நினைவுகளை தாலாட்டும் இந்த பாடல் எமக்காக.


புதன், 13 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல்..... # 1

பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று . நண்பர் தனிமரம் நேசன் அடிக்கடி பாடல் பதிவுகள் போட்டு கொசுவர்த்தி சுத்தற வைப்பதால் நானும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி கொஞ்சம் எழுதலாமே என்று தொடங்கி இருக்கிறேன்....(எழுத விஷயம் கிடைச்சிருச்சு ... அத சொல்லாம..... சும்மா )

அமிர்தன் பிறக்க இருந்த நேரத்தில் என்னவர் நிறைய கர்நாடக இசை பாடல்களை சேகரித்து எனக்கு தந்திருந்தார்... அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் MS சுப்புலட்சுமி அம்மா அவர்களின் "குறை ஒன்றும் இல்லை" பாடல்....
இது ஐ நா சபையில் பாடப்பட்ட பாடல்.... அது மட்டும் இல்லாமல் இந்த பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... கோவிலுக்கு போனாலும் "கடவுளே காப்பாற்று" என்பதை தவிர எதையுமே வேண்டத்  தோன்றுவதில்லை காரணம் ஆழ சிந்தித்துப்பார்த்தால் எதுவுமே குறை சொல்ல முடியாத வாழ்வை தான் இறைவன் தந்திருக்கிறான் அதை நிறைவாக வாழாதது நம் பிழையன்றி அவனது இல்லையே.... 

எனக்கு மட்டும் இல்லை அமிர்தனுக்கும் இந்த பாடல்  மிகவும் பிடிக்கும்... அவன் கருவில் இருக்கும் போதே நான் இந்தப்பாடலை அதிகம் கேட்டதாலோ என்னவோ குழந்தை பிறந்த பிறகும் சினுகும் நேரங்களில்  இந்த பாடலை கேட்டால்  அமைதியாகி விடுவான். அது இன்றும் தொடர்கிறது. 
தேன் குரலில் அம்மா பாடும் அந்த பாடல் இது...

இந்த பாடலின் அதே மெட்டையும்  கருத்தையும் சுமந்து வரும் இந்த பாடலும் எனக்கு விருப்பமான ஒன்று (அறை  எண் 305 இல் கடவுள் படத்தின் பாடல்)

இன்னும் என்னை கவர்ந்த பல பாடல்களோடு மீண்டும் வருகிறேன்....