செவ்வாய், 19 மார்ச், 2013

இவை கவிதைகள் அல்ல ஆனால் கவிதை மாதிரி :)


மீண்டும் 

விரைந்தோடும் வாகனத்தோடு
பின்னோடும் மரங்களூடு
மீண்டும் ஊருக்கே ஓடிப்போய்  விடுகிறது 
மனம்...

*********************************************************************************

தவிப்பு 

தாழிட்ட  எண்ணங்களை  எல்லாம்
தாளில் இடும் நாள் நோக்கி
தவித்திருக்கும்
மனது

*********************************************************************************

இசை 

இலைகளின் வழி வழிந்தோடும்
முன்காலை வெண்பனியாய்     
உன்
இசையின் வழி கரைந்தோடுகிறது
என் மனது.....

*********************************************************************************

சொல் எனும்  முத்து 

முகிழ்ந்தெழும் வார்த்தைகளுக்குள்
மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்
இன்னும்
முத்தெடுத்தபாடில்லை நான்...

*********************************************************************************

இன்னும்...

எழுதாக் கவிதை
வரையா ஓவியம்
சொல்லா சொற்கள்
உதிராக் கண்ணீர்
வெடித்தெழாக் கோபம்
இன்னும் உண்டு என்னிடத்தே...

*********************************************************************************

நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாதாம்...
நானும் அப்படித்தானோ?????????????