செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஆவல்....


இரவுக்குள்
நனைந்த படி
இசையோடு விழித்திருக்க !

காதலுக்குள் படுக்கை விரித்து
கவிதைகளுடன் உறங்கிப்போக !

நிலவெரியும் நடுவானை
நிம்மதியாய் ரசித்தபடி
உன் உதடுகளுக்குள் உயிர்கசிய
மார்புக்குள் மரித்து போகவென......
ஏராளமாய் ஆவல்கள் உண்டெனக்கு

உனக்கு ????????????