புதன், 15 பிப்ரவரி, 2012

பிறந்த நாள் வாழ்த்து...

"ஒரு குழந்தை பிறக்கும் போது தான் ஒரு தாயும் பிறக்கிறாள்"  
எவளவு உண்மையான வரிகள்...
அமிர்தவர்ஷன்........
ஒரு மெல்லிசையாக இவன் பிறந்த கணத்தில் தான் நாமும் புதிதாய் பிறந்ததாக உணர்ந்தோம்....
அது நடந்து இதோ மூன்று வருடங்கள் ஆகி விட்டதை நம்பவே முடியவில்லை...

ஆம்....
இன்று அமிர்தனின் மூன்றாவது பிறந்தநாள்.... அவரது ப்ரீ ஸ்கூல் நண்பர்களோடு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்....

எங்கள் செல்வம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அன்புத்திருநாள் வாழ்த்துக்கள்...


அனைவருக்குள்ளும் உள்ளது
ஒரு முயற்சி விதை
ஊக்கம் எனும் ஒரு துளி நீருக்காய்
காத்திருந்தபடி

அனைவருக்குள்ளும் உள்ளது 
ஒரு அறிவு விதை
வழிகாட்டல் எனும் ஒரு துளி நீருக்காய் 
காத்திருந்தபடி.

அனைவருக்குள்ளும் உள்ளது
ஒரு வாழ்தலிற்கான ஏக்க விதை
வாய்ப்பு எனும் ஒரு துளி நீருக்காய்
காத்திருந்தபடி

இங்கு அனைவரின் செயல்களும்
காத்து தான் கிடக்கின்றன
யாரேனும் ஒருவரின் அங்கீகாரத்திற்காய் 

ஒரு துளி ஊக்கநீர் வார்க்கவோ 
ஒரு துளி வழிகாட்டுதல் செய்யவோ,
வாய்ப்பு வழங்கவோ , அன்றி அங்கீகாரத்திற்கு 
தேவை என்னவோ
ஒரு துளி அன்பு தான்....

அன்பு தான் வழிகாட்டும் வாய்ப்பளிக்கும் , 
ஊக்கப்படுத்தும், அங்கீகரிக்கும்
அன்பு தான் உலகை அழகாக்கும்..
அன்பின் வழி  உலகம் உய்ய 
இன்றைய அன்பின் நாளில்
 பெய்யெனப் பெய்யட்டும் 
அன்பின் மழை உலகம் எங்கும்....

அனைவருக்கும் இனிய அன்புத்திருநாள் வாழ்த்துக்கள்...


டிஸ்கி
இன்றைய நாளை வியாபார நோக்கத்திற்காய் காதலர் தினமாக்கி வைத்திருக்கிறது இந்த வியாபார உலகம்.
உண்மையில் இது அன்பை பரிமாறும் தினம்.. அன்பு காதலர்க்கு மட்டும் தானா?
அனைவருக்குமானது இல்லையா?
அது தான் நான் அன்புத்திருநாள் வாழ்த்துக்கள் அப்பிடீன்னு பேர் மாத்திட்டேன்... இது தப்பா?

என் காதலுக்கு 
அனைவருக்கும் என் அன்பை தெரிவிக்கும் அதே நேரத்தில்
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இருந்தாலும், எனை கரம்பிடித்த கணம் தொட்டு இன்ற தினம் வரை எனக்கே எனக்காகவே வாழும் எனை அதிகம் நேசிக்கும், என்னை காதலிக்கும் என்னவருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து....

இந்த பாடல் அவருக்காக






முதல் படம் சுட்டது இங்க இருந்து தான்
"WOPICO2.BLOGSPOT.COM"   
ரெண்டாவது லிங்க் எங்கன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே :))))