திங்கள், 26 மார்ச், 2012

ஏன் இப்படி???????

முன் குறிப்பு..
நம்மை சுற்றி சில விடயங்கச்ல் நடக்கும் போது நம் அனைவருக்கும் வரும் ஒரு கேள்வி தான் இது, சிலது சின்ன விடயமாக இருக்கும் சிலது பெரிய விடயமாகவும் இருக்கும் . என் இப்படி என்று என்னை கேட்க வைத்த சில குழப்பமான, மகிழ்ச்சியான, நகைச்சுவையான ,வேதனையான,இன்னும் பல "...யான" க்களை  இதில் பகிர்த்து கொள்கிறேன்...


#1 
அமிர்தன் சிறு குழந்தையாக இருந்த போதே எல்லோரிடமும் நன்றாக பழகுவான். யார் தூக்கினாலும் அவர்களிடம் செல்வான் ..பயப்படவே மாட்டான். அம்மா தான்  செய்யணும் என்று அடம் பிடிக்கவும் மாட்டான் (சில சமயங்களில் நான் இந்த குணத்திற்காக கவலைப்  படுவதும் அவர் என்னை சமாதானப்படுத்துவதும் உண்டு)
அனால் என் மகள் இதற்கு நேர் எதிர் என்னை மட்டுமே தேடுகிறாள் . யாரிடமும் செல்வதில்லை (அவள் அப்பாவிடம் கூட) எந்த தேவையும் நானே தான் நிறைவேற்ற வேண்டும். நான் கண்ணில் படாத போது விளையாட்டிலோ அல்லது வேறு யாரிடமோ இருந்தாலும் நான் தென்பட்டு விட்டால் கத்தி கலாட்டா செய்து என்னிடம் வந்து விடுவாள்..
ஏன் இப்படி ??????????????????????????????????????????????????????????????????????


#2 
நாங்கள் இப்போது இருக்கும் தொடர் மாடிக்  குடியிருப்பில் தான் கடந்த 3  வருடங்களாக வாடகைக்கு குடியிருந்தோம் (சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு அபர்ட்மன்ட் வாங்கினோம் ) வாடகைக்கு இருந்த போதும் சரி இப்பொழுதும் சரி  எங்கள் கார் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் நிறுத்துவது வழக்கம் (இங்கு வாகனம்  நிறுத்தும் பகுதி சிறியது மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே வாகன நிறுத்தல் வசதி உண்டு ) வாடகைக்கு இருந்த வரைக்கும் எங்கள் காரின் மேல் அந்த மேல் வீட்டு ஐயரம்மா குப்பை போடுவதில்லை .. ஆனால் என்றைக்கு சொந்தமாக வீடு வாங்கினோமோ அன்றில் இருந்து  எங்கள் கார் குப்பை குழியாக நினைக்கத் தொடங்கிவிட்டார் ... நேரில் சொல்லியும் கேட்பதில்லை. என் வீட்டு சமையலறையின் கீழ் உங்கள் கார் நிற்பது தான் பிரச்சினை என்கிறார் . (பொறுத்து பார்த்து விட்டு இப்போது காருக்கு கவர் வங்கி போட்டு விட்டோம்). 
3  வருடமாக வராத பிரச்சினை எப்படி இப்பொழுது வந்தது (இத்தனைக்கும் பல சமயங்களில் நாம் அவருக்கும் அவர் மகன்மாருக்கும் லிப்ட் கொடுப்பதும் உண்டு)
ஏன் இப்படி ???????????????????????????????????????????????????????????????????


#3 
இது பல அம்மாக்களின் கேள்வியாகத்தான் இருக்கும்...
அமிர்தனும் சரி அகியும் சரி எப்பொழுதும் நான் சாப்பிட  அமரும் நேரத்தில் தான் அழ ஆரம்பிப்பார்கள், அல்லது ஈரம் செய்வார்கள். அதுவரை நல்ல உறக்கத்தில் இருக்கும் பிள்ளை சரியாய் நான் சாப்பிடும் போது தான் எழும்பி அழும்.
ஏன் இப்படி ???????????????????????????????????????????????????????????????????


#4 
சாதாரண நாளில் எல்லாம் நன்றாக இருக்கும் முகமும் முடியும் எதாவது  விழா விசேசத்திற்கு  போகும் போது மட்டும் டல்லடிப்பதும் சண்டித்தனம் செய்வதும்...
ஏன் இப்படி????????????????????????????????????????????????????????????????????


இப்படி நிறைய இருக்கு நினைவு வர வர எழுதுறேன் ............