புதன், 20 ஜூன், 2012

ஏன் இப்படி ????



நான் : ஹலோ ஆஷா...(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எப்பிடி இருக்க?


ஆஷா : ஹலோ சொல்லு நான் நல்ல இருக்கேன்..


நான்:நம்ம ...... தோழியோட அப்பா இறந்துட்டாருன்னு சொன்னேனே நம்பர் கூட அனுப்பினேன் போன் பண்ணியா?


ஆஷா : ஆஆ ஆமாண்டி நீ அனுப்பின ஆனா  நான் தான் மறந்துட்டேன்...


நான் : என்னடி நீ.. நாம எவ்வளவு க்ளோஸ் friends இப்பிடி சொல்லலாமா? உனக்கு வீடு கூட பக்கம் தானே...


ஆஷா : ஆமா... எங்க டி மகளோட ஸ்கூல் வேலைகளால மறந்திருச்சி...
நான் : (மனதிற்குள்)சாவ விசாரிக்க கூட நேரமில்லாம போக அப்பிடி என்ன டி படிக்கிறா  உன் மக (மகள் படிப்பது 2ம்  வகுப்பு என்பதை அறிக )


-----------
-----------
நான் : ஆமா எப்பவுமே நான் தான் பேசுறேன் நீ சும்மா கூட போன் பண்ண மாட்டியா?


ஆஷா : போன் பண்ணி என்ன தான் பேச??????


நான் : ங்கே .............

இது எனக்கும் என் தோழி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்...
இதில் வரும் இன்னொரு தோழியும் எங்களுடன் படித்தவர் நாங்கள் 5 பேர் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தோம்... அப்படி ஒரு தோழியின் தந்தையின் மரணத்தை தான் போன் பண்ணி விசாரிக்கவும் மறந்து விட்டதாக சொல்கிறாள்..
இத்தனைக்கும் எத்தனையோ முறை இவருக்கு உதவிகளும் .... 7 மணி நேரம் பயணப்படவேண்டிய பயணத்தை கூட பிற்போட்டு இவரின் ஆறுதலுக்காக வேண்டி இவரை உற்சாகப்படுத்தி பேசி பேசி தெளிய வைத்த என்னிடம் "போன் பண்ணி என்ன தான் பேச " என்று கேட்கிறாள்...
பெண்கள் திருமணத்தின் பின்னர் நட்பு வட்டத்திலிருந்து சற்று விலகுவது இயல்பு . அதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உண்டு என்றாலும் இவளையும் இவள் குடும்ப பின்னணியையும் நன்கு அறிந்தவள் என்ற காரணத்தினால் இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை..

ஒரே ஒரு கேள்வி தான் "என் இப்படி ????"
------------------------------------------------------------------------------------------------------------

நான் சீரியல் பார்ப்பதில்லை  (கேபிள் கூட கிடையாது ) ஆனால் இலங்கை தமிழ் சேனல்களிலும் சில இந்திய சீரியல்களை போடுகிறார்கள்... சில நேரம் எதற்காவது சேனல் மற்றும் போது  வரும்.  பார்க்கும் போதே கலக்கமாக இருக்கும்...  ஒருவர் அழுகிறார் அல்லது சவால் விடுகிறார்...அல்லது  யாரையாவது கொல்லவோ பழிவாங்கவோ திட்டமிடுகிறார்...
ஏங்க இங்க நமக்கு நம்ம பொழப்ப பார்க்கவே நேரம் சரியா இருக்கு இதுல இவங்க பிரச்சின வேற பார்க்கனுமா ... ஆனா இதயும் பல பேரு உக்காந்து பார்க்கிரகளே.....
என் இப்பிடி??? (எனக்கும் அழுவாச்சியா வருது...)
------------------------------------------------------------------------------------------------------------
விஷயம் கிடைக்கும்போது எழுத நேரம் இல்லாமல் போகும் ஆனா எழுதனும்னு வந்து உக்காந்தா...எதுவுமே உருப்படியா நினைவுக்கு வருதில்லையே... பதிலுக்கு தூக்கம் தான் வருது..
என் இப்படி??? (அவ்வ்வ்வவ்வ்வ்வ்)
இப்ப உங்களுக்கு "உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதுன்னு" பாட்டு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை ...