வெள்ளி, 27 ஜனவரி, 2012

பொங்கல் + கல்யாணம்

வாசல் நிறைய கோலம் போட்டு அது நடுவிலசெங்கல் அடுப்பு கட்டி அது மேல  மண் பானை வச்சி,பொங்கல் பொங்கின நாட்கள நினைச்சிகிட்டு.... வாசல் கோலம் போட்டு காஸ் அடுப்பில பொங்கல் வச்சி பொங்கல் நாளை இனிதாக முடிந்த வரை முறையாக கொண்டாடினோம். புது வீட்டில் வரும் முதல் பொங்கல் என்பதாலும் அகிலவர்ஷினி பிறந்த பின் வரும் முதல் பொங்கல் என்பதாலும் இது எங்களுக்கு மிக விஷேசமான பொங்கல் தான்.(ரொம்ப லேட்டா பொங்கல் பதிவு போடுரளேன்னு நினைக்க வேணாம் நமக்கு அம்புட்டு வேலை இருந்துச்சாக்கும்)...
இதில் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருக்கு 
வாசல்ல பொங்கல் வைப்பது என்பது தொடர்மாடி வீடுகளில் அனேகமாக சாத்தியம் இல்லை தான் எனினும் நேரத்துக்கு கூடவா பொங்கல் வைக்க முடியாது? சில வீடுகளில் 9  மணிக்கு தான் பால் அடுப்பில் ஏறியது.... என்ன கொடுமை சூரியபகவானே இதுன்னு நினைச்சுகிட்டேன்...
              ***********************************************************

நமக்கு ரொம்ப வேலை இருந்துச்சுன்னு சொன்னேனேன் இல்லையா அது வேற ஒன்னும் இல்லீங்க என் ஒரே தங்கையின் திருமண வேலைகள் தான்...
மேடம் கல்யாணம் ஆனா கையோட நியுசிலாந்து  போகப் போறாங்க....
கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது...
என் கல்யாணத்தில அழுவாச்சி படலமே இருக்கல்ல ஆனா மேடம் தூர தேசம் போறா படியால எங்கம்மா ஒரே அழுவாச்சி.... அப்புறமா கஷ்டப்பட்டு skype போட்டு தரேன்னு சொல்லி சமாதானப்படுத்தி வச்சிருக்கேன்.
ஜோக்ஸ் அபார்ட்... எனக்கும் கவலை தான் நானும் தங்கையும் சகோதரிகள் என்பதை விட நல்ல தோழிகள்  என்பது தான் பொருந்தும்...  அவள் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று நிறைய ஆசை பட்டது நான் தான் ஆனால் திருமணத்தின் பின் அவள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றுவிடுவாள் என்பது என் பெரிய வருத்தம். ஆனாலும் என்ன அவள் மனம் போல் நல்ல வாழ்வு அமைந்தது மகிழ்ச்சி... அவள்  என்றென்றும்  மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள்வானாக...

தங்கைக்காக இந்தப் பாடல் 

                        *******************************************************


வெள்ளி, 13 ஜனவரி, 2012

என் வீட்டுத் தோட்டத்தில்....

வீட்டுத் தோட்டம் போடுவது என்பது எனக்கு சிறு வயதில் இருந்தே பிடித்த விஷயம். ஆனால் இந்த பெருநகர வாழ்வில் அதுவும் தொடர்மாடி மனை வாழ்வில் அது அவ்வளவு சாத்தியப்படவில்லை. சொந்த வீடு வாங்கியதும் (தொடர்மாடி வீடு தான் ) இருக்கும் கொஞ்ச இடத்தில் தொட்டி வைத்தாவது ஏதேனும் வளர்ப்போமே என்று எண்ணினோம்.
வைத்திருந்த சின்ன சாடிகளை எல்லாம் என் அத்தையிடம் (என் மாமியார் தான் ஆனால் மாமியார் தனம சிறிதும் இல்லாதவர் இவரை பற்றி தனி பதிவு ஒன்று போடுகிறேன் ) சரண்டர் பண்ணிவிட்டு பெரிய தொட்டிகள் வாங்கினோம்.

எதோ பல ஏக்கர் விவசாயம் பண்ணப்போகும் விவசாயிகள் போல என்ன பயிரிடலாம் என்ற மந்திராலோசனை நடந்தது. தக்காளி, வெங்காயம், நெல், சோளம் இப்படி எல்லாம்  யோசித்து பின்னர் "ஆசை இருக்கு அரசாள அதிஷ்டம் இருக்கு கழுத மேய்க்க" என்று நினைத்துக் கொண்டு முதலில் ஒரு பசளி தண்டை  ஏக மனதாக முடிவு செய்து நட்டோம். அது வளர்ந்து வரும் போதே எங்கள் வீட்டுக்கு உதவிக்கு வரும் அம்மாள் சமையலுக்கு வாங்கிய பாகற்காயின் சில விதைகளை போட அதுவும் வளர்ந்தது. இப்போது கொஞ்சம் உற்சாகத்துடன் பயற்றம் விதைகளும் போட்டேன் அதுவும் வளர்கிறது.
இதை பார்த்த என்னவர் இன்னும் ஒரு சாடி வாங்கி அதில் தனியாக தக்காளி பயிரிடோம்.

சரி இப்போ எதுக்கு இந்த ராமாயணம் என்று கேக்கிறீங்களா? அத்தானே சொல்ல வந்தேன்... இதெல்லாம் பயிராகி பலன் தர தொடங்கிரிச்சு  ஏற்கெனவே பாகற்காய் சமையல் பண்ணி சாப்பிட்டாச்சு.


 இன்னைக்கு பசளி போட்டு பருப்பு செய்தேன். இத ஊரெல்லாம் சொல்லி முடிக்கட்டி சாமி குத்தமாகிராது?!!! அது தான் (ஸ்ஸ்ஸ்ஸ் ப்ப்ப்ப்பா... எப்பிடி எல்லாம் பதிவு தேத்த வேண்டி இருக்கு...)


இன்னும் மத்ததெல்லாம் பலன் கொடுக்குதா இல்ல பல்லிளிக்குதான்னு அடுத்தடுத்து சொல்லுறேன்..