வெள்ளி, 14 மே, 2010

எனக்கென்ன பயம்.....

ஒரு நீண்ட பாதை
தனியே நான் பயணித்துக் கொண்டே இருக்கிறேன்
இருட்டறைகள் - அதில்
மோதிச் செல்லும் வௌவால்கள் .

ரோஜா மலர்ப் பாதைகள் - அதில்
தைக்கும் முட்கள் .

சஹாரா பாலை
பிருந்தவனச் சோலை

இன்னும் பயணிக்கிறேன் நான்
என் பாதையில்
என்னோடு பயணிக்க .....

என்விரல்களை கோர்த்துக்கொள்ளும் துணிவும்
களைத்து விழுகையில் தோள் தரும் பரிவும்
உண்மையிலும் உண்மையான காதலும்
யாருக்கிருந்தலும்
வரலாம்

வரும் வரை ...
பயணிக்கிறேன் ..
தனியே நான்
எனக்கென்ன பயம் !!!

டிஸ்கி :
ரொம்ப நாளைக்கு முன்னர் எழுதியது இது....
பழைய டயரிகளை புரட்டிய போது தட்டு பட்டது பதிவாக இட்டு இருக்கிறேன்.
எப்படி இருக்கிறது ?

திரும்பி வந்துட்டனே............

"ரொம்ப நாளா ஒன்னும் எழுதக்காணோம்?? என்ன ஆச்சு?? "
இப்பிடி அப்துல்லா அண்ணா கேட்டாங்க......... எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருந்துது கொஞ்சம் வெட்கமாவும் இருந்துது.

(சந்தோசம்: நம்மளையும் மதிச்சி கேட்டிருக்காறேன்னு தான்
வெட்கம்: நம்ம சோம்பேறி தனத்த நெனைச்சி தான் )

இனிமேல் எப்படியாவது நேரம் ஒதுக்கி எழுதனும்னு முடிவு பண்ணிட்டோமில்ல.
அது மாத்திரம் இல்ல நாள் தவறாம எல்லாரோட ப்ளோக்கயும் படிச்சிப்புட்டு பின்னூட்டம் போடாம விட்ட சோம்பேறித்தனத்தையும் விட்டுட்டு நல்லா பிள்ளயாகிட்டேன்.
அப்பிடின்னு இத்தால் தெரிவிச்சிக்கிறேங்க..........