புதன், 18 ஏப்ரல், 2012

யாழ் பயணமும் புது வருடமும்

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள் (கொஞ்சம் லேட் தான் மன்னிச்சுடுங்க)

தூரப் பிரயாணம் அதனால் வந்த வேலைப்பளு, ரெண்டு சுட்டிகளை சமாளிக்கும் கடமை, வீட்டிலிருந்தபடியே செய்யும் உத்தியோகச் சுமை இப்படி பல விடயங்கள் இருந்தது அது தான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.(மனசாட்சி:- இல்லன்ன மட்டும் அப்பிடியே எழுதிக் கிழிச்சிருமாக்கும் இந்த சோம்பேறி)

சித்திரை வருடப்பிறப்பு வழக்கம் போல எங்க அத்தை வீட்டில்(என் புகுந்த வீடு )கலகலப்பாக இருந்தது. என்ன! யாழ்பாண வெய்யில் தான் தாங்க முடியல...
மற்ற படி ரொம்ப ஜாலியா இருந்தது. 
விறகடுப்பு சமையல், சுடச் சுட கறந்த பாலில் தேநீர், இயற்கையாக கிடைத்த மரக்கறிகளிலும், கரையில் இறங்கிய சூட்டுடன் நாங்கள் வங்கி வந்த மீன் நண்டுகளில் சமைத்த சாப்பாடு, இயற்கை காற்று என்று மிக நல்ல சுழலில் ஒரு  வாரம் போனதே தெரியவில்லை.

ம்ம்ம் மீண்டும் கொழும்பில் பால் மா தேநீர், குளிர்சாதனப்பெட்டியில் வைத்த  காய்கறி, அவசர சமையல் என்று வந்து விட்டோம். திரும்பி அங்கு போற வரைக்கும் அவல நினைச்சு உரல இடிப்போம் என்ன செய்ய..

ஆனால் அங்கு சென்றதால்  கிடைத்த சிறு ஓய்வில் நிறைய எழுதுவதற்கான விடயங்கள் கிடைத்தது.. (மனசாட்சி:- இவுங்க பெரிய எழுத்தாளர் அப்பிடியே வானத்த பார்த்து  யோசிச்சிட்டு வந்திருக்காங்க இனி எழுதிருவாங்க எல்லாரும தவறாம வந்து படிச்சிருங்க)
நேரம் கிடப்பதை பொறுத்து பகிர்துகொள்ள ஆவலாக  இருக்கிறேன் ...
(மனசாட்சி:- உங்கள எல்லாம் அந்த ஆண்டவன் தான் காப்பத்தனும் )