சென்ற ஞாயிறு பொருட்கள் வாங்க வேண்டிய தேவை இருந்தது ஆனாலும் நம்ம "ரங்கமணி" (நாமலும் நிறைய ப்ளாக் படிக்கிறோம் இல்ல அதான் ) கொஞ்சம் பிஸியா இருந்துட்டதால கொஞ்சம் நேரமாயிடுச்சு சரி புறப்படலாம்னு பார்த்தா நம்ம தவப்புதல்வருக்கு அப்பத்தான் தூக்கம் வருது :(....
எல்லாத்தையும் சரி பண்ணி புறப்படும் போது மணி ஏழு :((((((((((
நமக்கு தான் பத்து மணி வரைக்கும் சூப்பர் மார்க்கெட் இருக்குதே அப்பிடின்னு சமாதானம் பண்ணிக்கிட்டு கிளம்பி போனோம். அங்க போயி ஷாப்பிங் பண்ண தொடங்கும் போது தான் நம்ம ரங்கமணிக்கு மச்சினி சொன்னது நினைவு வந்து என்ன கேட்டாரு " ஏம்மா உன் தங்கச்சி ஏதோ
economical centre பத்தி சொன்னாளே இப்ப போய் பார்க்கலாமா "
ஆனா சும்மா சொல்லகூடாது உண்மையிலேயே நல்ல தெரிவு தான்
எல்லா பொருளுமே இருக்கு அதுவும் மத்த இடங்கள விட கம்மி விலையில கிடைக்குது. சூப்பர் மார்க்கெட் மாதிரி இருந்தாலும் தனி தனி கடைகளா இருக்கு.
ஆஹா ! இவ்வளவு நாளும் தெரியாம போச்சேன்னு நினைக்க வச்சிது.
முக்கியமா நிறைய பார்கிங் வசதி இருக்குது. நாலு மணியில இருந்து நள்ளிரவு வரைக்கும் திறந்து இருக்கிறதுனால வேலைக்கு போறவங்களுக்கும் ரொம்பவே வசதி. (ஞாயிறும் திறந்திருக்கும் , பௌர்ணமி நாள்ல மட்டும் விடுமுறை )
கொழும்பு வாழ் மக்களுக்கு இத்தாள் தெரிவிப்பது என்னன்னா நல்ல பொருட்கள் மலிவான விலையில பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம் Narahenpita கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள
economical centre ................
மீண்டும் சந்திக்கிறேன்