கல்யாணம் ஆனா பின் இப்போது நம்ம ரங்கமணி தனியாக மாட்டிக்கொண்டார். எல்லா பண்டிகை விழாக்களையும் எனக்கு தேவையான படி செய்து முடிக்க உதவி செய்தே அவருக்கு நுரை தள்ளிவிடும் (இருந்தாலும் கொஞ்சமும் முகம் சுளித்ததோ சலித்து கொண்டதோ இல்லை) . இந்த இரண்டரை வருடத்தில் எல்லா பண்டிகைகளையும் என் மனம்போல நிறைவேற்றி தந்திருக்கிறார்.
இந்த வருடம் எங்கள் புது வரவான அமிர்தவர்ஷன் உம் இருப்பதால் அவரின் முதல் தைப்பொங்கலை நன்றாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.
எப்படி கொண்டாடினோம் என்பதை நாளை மறுநாள் சொல்கிறேன் .
நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாள் அனைவருக்கும் நல்ல வளங்கள் அனைத்தையும் நல்கும் நல்லதோர் வருடத்தின் ஆரம்பமாக இருக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்களுடன்
சுதர்ஷினி ,ரமேஷ் மற்றும்

சுதர்ஷினி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா :)
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துககள் உங்களுக்கு்ம் வர்ஷனுக்கும்!
பதிலளிநீக்குநன்றி டீச்சர்
பதிலளிநீக்குஇனிய பொங்கள் வாழ்த்துக்கள்- உங்கள் குட்டிப்பையனுக்கும்!
பதிலளிநீக்குரொம்ப நாளா ஒன்னும் எழுதக்காணோம்?? என்ன ஆச்சு??
பதிலளிநீக்குஎன்னை தட்டி எழுப்பினதுக்கு நன்றி அண்ணா இதோ தொடங்கிட்டேன்
பதிலளிநீக்கு