கல்யாணம் ஆனா பின் இப்போது நம்ம ரங்கமணி தனியாக மாட்டிக்கொண்டார். எல்லா பண்டிகை விழாக்களையும் எனக்கு தேவையான படி செய்து முடிக்க உதவி செய்தே அவருக்கு நுரை தள்ளிவிடும் (இருந்தாலும் கொஞ்சமும் முகம் சுளித்ததோ சலித்து கொண்டதோ இல்லை) . இந்த இரண்டரை வருடத்தில் எல்லா பண்டிகைகளையும் என் மனம்போல நிறைவேற்றி தந்திருக்கிறார்.
இந்த வருடம் எங்கள் புது வரவான அமிர்தவர்ஷன் உம் இருப்பதால் அவரின் முதல் தைப்பொங்கலை நன்றாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.
எப்படி கொண்டாடினோம் என்பதை நாளை மறுநாள் சொல்கிறேன் .
நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாள் அனைவருக்கும் நல்ல வளங்கள் அனைத்தையும் நல்கும் நல்லதோர் வருடத்தின் ஆரம்பமாக இருக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்களுடன்
சுதர்ஷினி ,ரமேஷ் மற்றும்
